புள்ளிப்படிமவியம்

ஜார்ஜசு செயுராத் 1889ல் வரைந்த ஒரு ஓவியம்.

புள்ளிப்படிமவியம் (Pointillism) என்பது, தூய நிறங்களைக் கொண்ட சிறு புள்ளிகளைக் குறிப்பிட்ட முறையில் நெருக்கமாக இட்டு ஓவியங்களை வரையும் ஒரு நுட்பம் ஆகும். ஜார்ஜசு செயுராத், பால் சிக்னாக் ஆகிய இருவரும் 1886 ஆம் ஆண்டில், உணர்வுப்பதிவியத்தில் இருந்து கிளைத்த ஒரு பிரிவாக இந்த முறையை உருவாக்கினர்.